Wednesday, January 09, 2008

அதிதியும் அவள் நாணா தாத்தாவும்

இரண்டு நாட்களாக அதிதி வாய் ஓயாமல் "தாத்தா, தாத்தா", "பாட்டி, பாட்டீ" என்று கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறாள். நிறைய பேச்சு வந்துள்ளது. மழலையில் கொஞ்சுகிறாள். நானும், விஜயாவும் அந்த அமிழ்தத்தில் அள்ளூறி மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆண்டவனுக்கு நமஸ்காரங்கள்.






நேற்று (8 ஜனவரி) அதிதி என்னை திடீரென "நாணா தாத்தா, நாணா தாத்தா" எனக் கூப்பிட ஆரம்பித்தாள். நாராயணனை நாணா எனக் கூப்பிடுவது வழக்கம்தான் என்றாலும், என் அருமை பேத்தியின் மழலையில் கேட்க என்னவொரு ஆனந்தம் !! Aditi, Thatha


ராஜப்பா

10:45 காலை, 9 ஜனவரி 2008