Tuesday, September 09, 2008

Aditi's Love and Anguish

எங்கள் வீட்டு பழைய சோபா செட், உணவு மேஜை, கட்டில்கள் ஆகியவற்றை நேற்று (8 செப் 2008) விற்று விட்டோம். பகல் 2 மணிக்கு ஆட்கள் வந்து எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போனார்கள்.

ஆட்கள் வருவதையும், சோபா நாற்காலிகளை எடுத்துக் கொண்டு போவதையும் பார்த்துக் கொண்டிருந்த எங்கள் அதிதி திடீரென அழ ஆரம்பித்தாள். "எடுத்திண்டு போக வேணாம்"னு ஒரே அழுகை.

பின்னர் ஆட்கள் டைனிங் டேபிளை எடுக்க ஆரம்பித்ததும், அவள் விக்கி விக்கி அழ ஆரம்பித்து விட்டாள்; "நாம்ப எங்க சாப்பிடுவோம்?" என அழுதாள்.

(டைனிங் டேபிள் பற்றிய எனது பதிவு இங்கே படிக்கலாம்)

பெட்ரூமிற்கு வந்து, கட்டில்களை எடுக்க ஆரம்பித்ததும், அவளது அழுகை கட்டுமீறி போய் விட்டது. "வேண்டாம், வேண்டாம், தாத்தா - பாட்டி எங்க படுத்துப்பா?"-ன்னு அழுகையான அழுகை. அவள் அழுவதைப் பார்த்து, என் கண்களிலும் நீர் நிரம்பியது.

2 வயசுதான் ஆகிறது, குழந்தைக்கு என்ன ஒரு பற்று, என்ன ஒரு பாசம் !!

Aditi and Sowmya (Jul 2008)


Aditi with her Paatti

ஆண்டவன் அவளை ஆசிர்வதிக்கட்டும். God Bless you Aditi darling.

Rajappa
6-15PM on 9 Sep 2008