Friday, May 29, 2009

ஸ்ரீராமிற்கு இரண்டாவது மொட்டை SRIRAM


ஸ்ரீராமிற்கு முதலில் வைத்தீஸ்வரன் கோயிலில் (2009) ஃபிப்ரவரி 1 ஆம் தேதியன்று முடி இறக்கினோம். விவரம் இங்கே.

குழந்தைக்கு இரண்டாவது மொட்டை திருச்சிக்கு அருகில் உள்ள சமயபுரம் கோயிலில் (2009) மே மாஸம் 19 ஆம் தேதியன்று நடத்தப் பெற்றது. இது காயத்ரியின் பெற்றோர் செய்த ஏற்பாடு !! காயத்ரி, ஸௌம்யா, காயத்ரியின்
பெற்றோர் போயிருந்தனர். அருண் மற்றும் நாங்கள் போகவில்லை.

போட்டோக்கள் (2009) மே 28 ஆம் தேதியன்று எடுக்கப்பட்டவை.


ராஜப்பா
இரவு 8:45 மணி
29-05-2009

Tuesday, May 19, 2009

Sowmya Celebrates Her 3rd Birthday - 17-5-2009

ஸௌம்யாவின் மூன்றாவது பிறந்த நாள்

17-05-2009, ஞாயிற்றுக்கிழமை இதைக் கொண்டாடினோம். திருவான்மியூரில் அருண் வீட்டில் விழா நடந்தது. நானும் விஜயாவும் மாலை 5 மணிக்கே போய்விட்டோம்.

6-30 மணி முதல் மற்றவர்கள் வர ஆரம்பித்தனர். அதிதி ஒரு புதிய அழகிய “அனார்கலி” சூடிதாரில் வந்தாள். ஸௌம்யா நாங்கள் வாங்கிக் கொடுத்த பாவாடை-சட்டையை போட்டுக்கொண்டாள்; ஸ்ரீராமிற்கும் புது ட்ரெஸ்.

ஸௌம்யாவிற்கு “அனார்கலி” சூடிதார் அர்விந்த்-கிருத்திகா-அதிதி பரிசளித்தனர்; சதீஷ் அழகிய ஒரு BAG பரிசளித்தான். (அதிதிக்கும் ஒன்று)

7-15 மணிக்கு ஸௌம்யா கேக் வெட்டினாள்.

பின்னர் விருந்து ஆரம்பம். குலாப் ஜாமூன் மற்றும் கேக் - அம்பாஸடர் பல்லவா ஹோட்டலிலிருந்து. Phulka சப்பாத்தி, அதற்கான இரண்டு வகை கறி/கூட்டுகள், பனீர் பட்டர் மஸாலா; Noodles; - இவையும் வெளியிலிருந்து தருவிக்கப்பட்டவை. விஜயாவும், காயத்ரியும் வீட்டிலேயே ஜூஸ், தயிர் சாதம் பண்ணினார்கள். விருந்து நன்றாக இருந்தது. எல்லாவற்றையும், குறிப்பாக தயிர்சாதத்தை, ரசித்து சாப்பிட்டோம்.

அருண், காயத்ரி, ஸௌம்யா, ஸ்ரீராம், நாங்கள் இருவர், அர்விந்த், கிருத்திகா, அதிதி, சதீஷ், காயத்ரியின் அப்பா-அம்மா, பெரியப்பா-பெரியம்மா, சுரேஷ், பானு, இரண்டு குழந்தைகள், பெரியப்பா பெண் சித்ரா, இரண்டு குழந்தைகள், கணேஷ், காயத்ரியின் அம்மா வழியிலிருந்து பெரியம்மா, பெரியப்பா, சுந்தர் அண்ணா, கோபால் மாமா, கிட்டா மாமா, சாரதா, ஸ்வாதி, விஜயராகவன், மாமி, சந்தர், ஜனனி - மொத்தம் 32 பேர்.

9 மணிக்கு ஒவ்வொருவராக வீடு திரும்பினர். காயத்ரி-அருணுக்கு உதவி செய்துவிட்டு நாங்கள் வீடு திரும்பும்போது இரவு மணி 10-45. அருண் காரில் கொண்டு வந்து விட்டான்.

ஸௌம்யாவின் 3-ம் பிறந்த நாள் விழா மிக இனிதாக சிறப்பாக நடந்தேறியது. குழந்தைகளுக்கும் அருண்-காயத்ரிக்கும் எங்கள் ஆசிகள்.

ராஜப்பா
19-05-2009
பகல் மணி 12:25

Saturday, May 09, 2009

ஸௌம்யாவிற்கு அக்ஷராப்பியாஸம் - Aksharabyasam to Sowmya

யாகுந்தேந்து துஷாரஹார தவளா யா ஸுப்ர வஸ்த்ராவ்ருதா
யா வீணா வரதண்ட மண்டிதகரா யா ஸ்வேத பத்மாஸநா
யா ப்ரஹ்மாச்யுத ஸங்கரப்ரப்ருதிர் தேவைஸ்ஸதா பூஜிதா
ஸா மாம் பாது ஸரஸ்வதீ பகவதீ நிஸ்ஸேஷ ஜாட்யாபஹா.

எங்கள் ஸௌம்யாவிற்கு இப்போது 3 வயசாகப் போகிறது (17-5-2006 அன்று பிறந்தாள்). அவளுக்கு சென்ற வியாழன் 7 மே அன்று அக்ஷராப்பியாஸம் செய்து வைத்தோம்.

வேண்டிய சாமான்களையும், புஷ்பம், அரிச்சுவடி போன்றவைகளையும் மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் வாங்கினோம். மற்ற சாமான்களை அருண் திருவான்மியூரில் வாங்கினான்.
7 ஆம் தேதி காலை 7-15க்கே விஜயாவும் நானும் அருண் வீட்டிற்கு சென்று விட்டோம். காயத்ரியின் அப்பா-அம்மா அங்கே ஏற்கனவே இருந்தனர். கோபால மாமா பூஜை பண்ணுவதாக இருந்தார். கடைசி நேரத்தில் அவருக்கு உடம்பு சரியாக இல்லாததால், கிட்டா மாமா (கிருஷ்ணன்) தான் வந்து மந்திரம் சொல்லி பூஜை பண்ணினார்.
காலை 8-45 க்கு ஆரம்பித்த பூஜை 10-15க்கு முடிவுற்றது. ஸரஸ்வதீ தேவிக்கு அருணும், ஸௌம்யாவும் நிறைய பூ போட்டு அர்ச்சித்து பூஜை செய்தனர். ஸௌம்யாவின் நாக்கில் தேன் தடவப் பெற்றது. (ஸ்ரீராமிற்கும்தான் !) முதலில் நெல்லிலும், பின்னர் ஸ்லேட்டிலும் தமிழ் எழுத்துக்களை ஸௌம்யா எழுதினாள்.

பூஜை முடிந்ததும் அப்பளம், வடை, பாயஸத்துடன் விருந்து. காயத்ரியின் அம்மா பண்ணினார்.
அருண், காயத்ரி, குழந்தைகள், விஜயா, நான், காயத்ரியின் அம்மா, அப்பா, கிட்டா மாமா, சாரதா, ஸ்வாதி, விஜயராகவன், சாரதா மாமி (சந்தரின் பெற்றோர்), கிருத்திகா, அதிதி ஆகியோர் சாப்பிட்டோம். (அர்விந்த் அன்று பெங்களூர் போயிருந்தான்)

இவ்வாறாக, குழந்தை ஸௌம்யாவின் அக்ஷராப்பியாஸம் நல்ல முறையில் நடந்தது. குழந்தைக்கு ஸரஸ்வதியின் பரிபூரண அருள் கிடைக்கட்டும்.

ஸ்ரீ ஸரஸ்வதீ தேவ்யை நம:



ராஜப்பா
12:30 09-05-2009