Saturday, May 25, 2013

அர்ஜுன் ஆயுஷ்ஹோமம்

அர்ஜுன் ஆயுஷ்ஹோமம்.

அர்விந்த் - கிருத்திகாவின் குழந்தை சி. அர்ஜுனின் ஆயுஷ்ஹோமம் 2013 மே மாஸம் 23 வியாழன்று சென்னை RK Mutt road@-ல் ஸ்வாமி ஹாலில் நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை ஒரு மாஸம் முன்னதாகவே அர்விந்தும் கிருத்திகாவும் ஆரம்பித்து விட்டனர். சாஸ்திரிகளுக்கு சொல்வது, caterer-உடன் பேசுவது என நானும் என் பங்கிற்கு வேலைகள் செய்தேன். பத்திரிகை LB road Mekala Invitationsல் அடிக்கப்பட்டது. எல்லாரையும் பத்திரிகை மூலமாகவும் ஃபோன் மூலமாகவும் அழைத்தோம் 

அருணும் அஷோக்கும் பெங்களூரிலிருந்து வந்தனர். 22-ஆம் தேதி விடியற்காலம் அருண் குடும்பத்தினரும், அன்று இரவு அஷோக் - நீரஜாவும் வந்தனர். நாங்களும் 14-ஆம் தேதியன்றே பெங்களூரிலிருந்து திரும்பி விட்டோம்.

மே 23, 2013 வியாழன்

காலை 03 மணிக்கே எழுந்து கொண்டேன். எல்லாரும் சீக்கிரமே எழுந்து கொண்டு, குளித்து ரெடியானோம்.5-45க்கு 2 காரில் ஹாலுக்கு கிளம்பினோம். அது ஏஸி ஹால். 

உறவினர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். லலிதா-குமார், ஜனனி முதலில் வந்தனர். 6-45க்கு காலை சிற்றுண்டி - ரவா கேஸரி, இட்லி, பொங்கல், வடை. மும்பையிலிருந்து வைஷாலியும் விஷ்ணும் வந்தனர். சாஸ்திரிகள் மாமா 8 மணிக்கு வந்து ஆரம்பித்தார். அர்ஜுன் நீல கலரில் (ரெடிமேட்) வேஷ்டி போட்டுக் கொண்டான்.

சரோஜா, அத்திம்பேர், சுகவனம், பிரகாஷ், ராஜேஸ்வரி, சுபா, மகேஷ், விஜயராகவன், மாமி (சுதா ஆகியோர் ஊட்டியில் இருந்தார்கள், வரவில்லை), சுதன், இந்திரா, லக்ஷ்மி, பெண்கள், விஜயாவின் தோழி நாகலக்ஷ்மி ஆகியோர் வந்தனர். அர்விந்தின் ஆஃபீஸ்காரர்கள், மாமாவின் நண்பர்கள், மாமியின் உறவினர்கள்  என 90 பேருக்கும் மேலாக வந்தனர்.









TSG தாத்தாவின் மடியில் உட்கார்ந்து கொண்டு அர்ஜுன் காது குத்திக் கொண்டான். விழா சுமார் 11 மணிக்கு நிறைவு பெற்றது. பின்னர் விருந்து. அம்பத்தூர் அருகில் உள்ள அயப்பாக்கத்திலிருந்து, ராமா கேடரர். நாங்கள் யாவரும் 12-15க்கு சாப்பிட்டோம்; பின்னர் வீடு திரும்பினோம். 

சுந்தரேசன், சாவித்திரி, மங்களம், ரமா, வாசு, பாமா ஃபோன் மூலம் ஆசிகள் கூறினார்கள். இப்படியாக, அர்ஜுன் ஆயுஷ்ஹோமம் மிக சிறப்பாக நடந்தேறியது.

இரவு உணவு ஹோட்டலிலிருந்து வரவழைக்கப்பட்டது (அர்விந்த்) . சாப்பிட்ட பின்னர் 10:30க்கு அருண், அஷோக் ஆகியோர் பெங்களூர் கிளம்பினர்.

ராஜப்பா
25-05-2013